Archives: ஜனவரி 2018

கடைசி வார்த்தை

ஒரு நாள் பல்கலைகழகத்தில் தத்துவ வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, அந்த பேராசிரியரின் கருத்துக்கு மாறாக, ஒரு மாணவன் கோபமூட்டக் கூடிய ஒரு கருத்தினை தெரிவித்தான். மற்ற மாணவர்கள் ஆச்சரியப்படும்படியாக அந்த ஆசிரியர் அம்மாணவனுக்கு நன்றி கூறியதோடு, மற்றொரு கருத்தினை விளக்க முற்பட்டார். பின்னர் அவரிடம் அம்மாணவனின் கருத்துக்கு ஏன் பதிலளிக்கவில்லை எனக் கேட்டபோது, “நான் கடைசி வார்த்தையைக் சொல்பவனாக இருக்கக் கூடாது என்கிற கொள்கையைக் செயல்படுத்தி வருகிறேன் என்றார்.

இந்த ஆசிரியர் தேவனை நேசிப்பவராகவும், கனம் பண்ணுபவராகவும் இருப்பதோடு, தாழ்மையின் ஆவியை அணிந்து கொண்டவராய் தேவ அன்பை வெளிப்படுத்தினார். இவருடைய வார்த்தைகள் எனக்கு வேறொரு ஆசிரியரை நினைவுபடுத்துகிறது. இந்த ஆசிரியர் வெகு காலங்களுக்கு முன்பு பிரசங்கி புத்தகத்தை எழுதினார். ஒரு கோபமுள்ள மனிதனை எவ்வாறு கையாள வேண்டுமென்று சொல்லாவிட்டாலும், அவர் கூறியது நாம் தேவனண்டை செல்லும் போது நம்முடைய நடையைக் காத்துக்கொள்ள வேண்டும், துணிகரமாய் வாயினால் பேசாமலும், மனம் பதறி ஒரு வார்த்தையும் சொல்லாமலும் “செவி கொடுக்கச் சேர்” என்கிறார். இவ்வாறு செய்யும் போது, நாம் அவர் தேவாதி தேவன் எனவும், நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம் (பிர. 5:1-2).

நீ தேவனண்டை எவ்வாறு செல்கிறாய்? உன் உணர்வுகள், உன் அணுகுமுறையை சற்று சரிசெய்துகொள் என்று உணர்த்தும் போது, மேன்மை பொருந்திய மகா தேவனைக் கனப்படுத்த, ஏன் அதற்கு சில மணித்துளிகள் செலவிடக் கூடாது? அவருடைய எல்லையில்லா ஞானத்தையும் வல்லமையையும், பிரசன்னத்தையும் நினைக்கும் போது, நாம் அவருடைய நிரம்பி வழியும் அன்பை நினைத்து வியந்து நிற்போம். இந்த தாழ்மையின் கோலத்தோடு இருக்கும் போது, நாமும் கடைசி வார்த்தையை சொல்பவர்களாக இருக்க மாட்டோம்.

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்

“நீ கேளிக்கைகளில் இருக்கும் போது நேரம் பறக்கிறது” இந்த எண்ணத்திற்கு எந்த அடிப்படை ஆதாரமுமில்லையெனிலும், அனுபவம் இதனை உண்மையெனக்காட்டுகிறது.

வாழ்க்கை இன்பமாக இருக்கும் போது, நேரம் மிக வேகமாக கடந்துவிடுகிறது. நான் விரும்பத்தக்க ஒரு பணியை செய்தாலோ, அல்லது நான் விரும்பும் ஒரு நபரோடு நான் இருந்தாலோ அதற்கு நேரம் ஒரு பொருட்டல்ல.

இந்த உண்மையைக் குறித்த என்னுடைய அனுபவம், வெளிப்படுத்தல் 4ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ள காட்சிக்கு ஒரு புதிய புரிந்து கொள்ளலைத் தருகிறது. முன்பு நான் தேவனுடைய சிங்காசனத்தின் அருகில் அமர்ந்திருக்கும் நான்கு ஜீவன்களும் ஓயாமல் சில வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை சலிப்படையச் செய்யும் வாழ்வு என நான் நினைத்ததுண்டு.

ஆனால், இப்பொழுது அவ்வாறு சிந்திப்பதில்லை. அவற்றின் அநேகக கண்களால் (வச. 8) அவை பார்க்கின்ற காட்சிகளை நான் நினைத்துப் பார்க்கின்றேன். தேவனுடைய சிங்காசனத்தினருகில், அவற்றின் நிலையிலிருந்து, அவை பார்க்கின்றவற்றை நான் கருத்தில் கொள்கின்றேன் (வச. 6) நான் நினைக்கின்றேன், தேவன் புவியில் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றவர்களிடையே எத்தனை ஞானமும்; அன்பும் கொண்டு உறவாடுகிறார் என்பதைக் கண்டு அவைகள் வியந்திருக்கின்றன எனவே இதைவிட மேலான என்ன பதிலைக் காட்ட முடியம்? என நினைக்கிறேன். “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்வதைவிட வேறென்ன சொல்வதற்கிருக்கிறது?

ஒரே வார்த்தையை மேலும் மேலும் கூற உனக்கு சலிப்பாயிருக்கிறதா? நீ நேசிக்கும் ஒருவரின் பிரசன்னத்தில் நீ இருக்கும் போது சலிப்பே ஏற்படாது. நீ எதற்காக உருவாக்கப்பட்டாயோ அதனை நிறைவேற்றும்போது நிச்சயமாக சலிப்பு இல்லை.

அந்த நான்கு ஜீவன்களைப் போன்று நாமும் தேவனை மகிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டோம். நாம் நம்முடைய கவனத்தை அவர் மீது வைத்து, அவரின் நோக்கத்தை நிறைவேற்றும் போது நம்முடைய வாழ்வு ஒருபோதும் சலிப்படையாது.

இந்தக் கட்டுரையை எழுதிய ஜூலி இப்பொழுது மோட்சத்தில் தேவனை ஆராதித்துக் கொண்டிருக்கின்றார்.

மெய்யான நம்பிக்கை

சில நாட்களுக்கு முன்பு நான் எனது நண்பனோடு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பார்வையிடச் சென்றிருந்தேன். அங்கு பார்வையிட வந்தோரின் வரிசை, குறைவாகவே காணப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்தின் உள்ளே சென்றபின் அந்த நுழைவு வராண்டா, படிக்கட்டு, அதன் வழியேயுள்ள மற்றொரு அறை அனைத்திலும் இருந்த நீண்ட வரிசை மக்களைக் கண்டோம். ஒவ்வொரு புதிய திருப்பமும் நாங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதைத் தெரிவித்தது.

கவர்ச்சிகரமானவற்றிலும், கருத்து பூங்காக்களிலும் மக்கள் வரிசை சிறிதாக தோன்றும்படி கவனமாக வழியை அமைக்கின்றனர். எனினும் நாங்கள் “கட்டிடத்தின் திருப்பத்தை” அடைந்தபோது ஏமாற்றங்களையே சந்தித்தோம்.

சில வேளைகளில் வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மிகவும் கடுமையாக இருக்கலாம். நாம் எதிர்பார்க்கும் வேலை கைக்கூடவில்லை, நாம் நம்பிய நண்பர்கள் ஏமாற்றிவிட்டனர், நாம் ஏங்கிய வாழ்க்கைத் துணை அமையவில்லை. இத்தனை இதய நொறுங்குதலிலும் தேவனுடைய வார்த்தைகள், அவர் மீதுள்ள நம்பிக்கையைப் பற்றி ஒரு புதிய உண்மையைப் பேசுகின்றது, அப்போஸ்தலனாகிய பவுல், “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகின்றோம், மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோம. 5:3-5) என எழுதுகிறோம்.

நாம் நமது நம்பிக்கையை தேவன் மீது வைக்கும் போது, எத்தனை தடைகளை நாம் சந்தித்தாலும் அவருடைய ஆவியானவர் மூலம், நாம் அவரால் நிபந்தனையற்று நேசிக்கப்படுகிறோம், ஒரு நாள் நாமும் அவரோடு கூட வாழ்வோம் என்ற உண்மையைப் பேசுகின்றார். நமக்கு அடிக்கடி ஏமாற்றத்தையே தருகின்ற இந்த உலகில் தேவன் நமக்கு உண்மையான நம்பிக்கையைத் தந்திருக்கிறார் என்பது எத்தனை நலமானது.

வாழ்வு தரும் தேவன்

சில குளிர்காலங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த பட்டணம் அசாதாரணமான, எலும்பையும் துளைக்கக் கூடிய குளிர்ந்த காலநிலையை நீண்ட நாட்கள் அனுபவித்தது. ஆனால், இறுதியாக அது ஒரு வெப்பமான வசந்த காலத்திற்கு வழிவகுத்தது. இரு வாரங்கள் தொடர்ச்சியாக வெளிப்புற வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே தள்ளப்பட்டது (-20°c;-5°).

அப்படியொரு மிகக் குளிர்ந்த நாள் காலையில் கிரீச்சிடும் பறவைகளின் ஓசை, இரவின் அமைதியைக் கலைத்தது. நூற்றுக்கணக்கான பறவைகள் தங்கள் இருதயத்தின் எண்ணங்களைப் பாடின. அந்த சிறிய உயிரினங்கள் தங்களைப் படைத்தவரை நோக்கி, தயவாய் அனைத்தையும் வெப்பமாக்கித் தாரும் என்று கதறுவதாக நான் உறுதியாகக் கூறமுடியும்.

பறவை நிபுணர்கள், பிந்தின குளிர்காலங்களில் நாம் கேட்கும், பறவையின் பாடல்களையெல்லாம் பாடுவது, அநேகமாக ஆண் பறவைகளே. அவை தங்கள் துணைகளை ஈர்ப்பதற்கும், தங்கள் எல்லைகளை உறுதிப்படுத்தவும் பாடுகின்றன என்கின்றார். தங்கள் வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளவும், வளப்படுத்திக் கொள்ளவும் தேவன் தன் சிருஷ்டிப்புகளை நமக்கு சீர்ப்படுத்தியுள்ளார் என்பதை அவற்றின் குரல்கள் நினைப்பூட்டுகின்றன. ஏனெனில் அவர்தான் வாழ்வு தரும் தேவன்.

தேவன் படைத்த, வளங்கள் நிறைந்த பூமியை வியந்து சங்கீதக்காரன் “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர், மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர்” எனப் பாடுகிறார். மேலும் “அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்” (சங். 104:12) என பாடுகிறார்.

பாடுகின்ற கூடுகட்டி வாழ்கின்ற பறவைகள் முதல் பெரிதும் விஸ்தாரமான சமுத்திரம் வரை “அதிலே சஞ்சரிக்கும் எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு” (வச. 25). அத்தனையும் படைத்தவரும், அவைகள் அத்தனையும் வாழ்வதற்கு உறுதியளிக்கின்றவருமாகிய நம்முடைய சிருஷ்டிகரே போற்றத் தகுந்தவர்.

அன்பினால் ஒரு “ஆம்”

2016ஆம் ஆண்டு, ஆகஸ்டு 21ஆம் நாள் லூசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்தைப் பற்றிய படங்களை, கிரிஸா சமூக ஊடகங்களில் பதித்தாள். மறுநாள் காலை, வெள்ளப்பகுயிலிருந்து ஒருவர் உதவிக்காக வேண்டிய குறிப்பையும் அதில் சேர்த்தார். 5 மணி நேரம் கழித்து, அவளும் அவளுடைய கணவன் பர்பியும் உதவி செய்வதற்காக தாங்கள் செய்யவிருக்கும் 1000 மைல் பயணத்தில், தங்களோடு சேரும்படி மற்றவர்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தனர். 24 மணி நேரத்திற்குள், தங்கள் வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி 13 நபர்கள் அவர்களோடு இணைந்து கொண்டனர்.

தங்களுடைய அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு, 17 மணி நேரம் பிரயாணம் பண்ணி, உபகரணங்களை நகர்த்தி, இடிபாடுகளை அகற்றும் வேலையைச் செய்யும்படி, இதற்கு முன்னர் சென்றிராத ஓர் இடத்திலுள்ளவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்குமாறு செல்லும்படி, எது அம்மக்களைத் தூண்டியது? அதுதான் அன்பு.

அவள் உதவிக்காக அழைப்பு விடுத்தபோது அதனோடு இணைத்திருந்த வசனத்தை நினைத்துப் பார்த்தால், “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங். 37:5). உதவி செய்யும்படி தேவன் விடுத்த அழைப்பை ஏற்போமாகில் இந்த வார்த்தைகள் உண்மையென விளங்கும். அப்போஸ்தலனாகிய யோவான், “ஒருவன்… தன் சகோதரனுக்குத் குறைச்சலுண்டு என்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக் கொண்டால் அவனுக்குள் தேவ அன்பு நிலை கொள்ளுகிறதெப்படி?” (யோவா. 3:17) அது ஒருவேளை கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால், “தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்கிறபடியால்” (வச. 22) தேவன் வாக்களித்த உதவியைச் செய்வார்.

ஒரு தேவை வரும்போது, தேவன் நம்மை பிறருக்கு உதவும்படி அழைக்கிறார் என்று உணர்ந்து, அன்போடும், விருப்பத்தோடும் “ஆம்” என முன்வருவதே தேவனை கனப்படுத்துவதாகும்.